“ஆர்ட்டிக்கிள் 15 ” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு...
கொரோனா அதிகரிப்பை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை...
மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, “எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை...
தான் நடித்த படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் சொல்லிி வந்ததால் சின்னக்்் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று 4:45 அளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார். நேற்று முன்தினம் அவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று மாரடைப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு ...
நம்மை வாழ்வில் அதிகம் சிரிக்க வைத்தவர்களின் வாழ்க்கை நிறைய நேரங்களில் சோகமாகவே முடிவதை பார்த்திருக்கிறோம். உலகின் நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் தொடங்கி கலைவாணர் என் எஸ் கே தொடர்ந்து சந்திரபாபு வரை பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கை சோகத்திலேயே முடிந்திருக்கிறது. அப்படி ‘ சின்ன கலைவாணர் ‘
கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு”. விக்ரம் பிரபு இதுவரை ஏற்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக் ஷன் த்ரில்லர் நிறைந்த சமூகபடமாகவும் உருவாகிறது. கதாநாயகியாக ஸ்முருதி வெங்கட் மற்றும் வரலட்சுமி...
தமிழில் வெளியான ‘ அந்நியன் ‘படத்தை இயக்கிய ஷங்கர் அதே படத்தை இந்தியில் இயக்க விருப்பதாக நேற்றைய தினம் மீடியாக்களில் பரவலாக செய்திகள் வெளிவந்தன. அந்நியன் படத்தை தயாரித்தது ஆஸ்கார் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம். இந்நிலையில் அந்நியன் ஹிந்தி தயாரிப்பு குறித்து நேற்று வெளிவந்த தகவல்களை பார்த்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று ஷங்கருக்கு...