சட்டசபை வந்த உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை
தலைவர் மீது துரும்பு பட்டாலும் – தமிழக அரசை எச்சரித்த மக்கள் நீதி மையம்
கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சென்னை வேப்பேரி மத்திய…
Read More
டெல்லி வன்முறை அமித்ஷாவுக்கு ரஜினி கண்டனம் – கமல் வரவேற்பு
இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் பற்றி பரபரப்பான பேட்டி அளித்தார். அதிலிருந்து…
” சிஏஏ சட்டமாக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் சாதகமாக தீர்ப்பு வருமா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை சிஏஏ திரும்ப பெறப்படாது என்று தெரிகிறது.
இதை சொன்னால் பாஜகவின் ஊதுகுரல் என மூத்த அரசியல் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். சில கட்சிகள் மதரீதியாக மக்களை தூண்டுகின்றனர்.
இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஊடகங்கள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்…
Read More
தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் – கமல்
சென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் சொன்னது:
பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன்.
தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும்.
தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறீா்களா எனக் கேட்கிறீா்கள்.
கண்டிப்பாக. தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் Read More
ரஜினிக்கு சம்மன் அனுப்ப சீமான் தான் காரணம்..?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
நம்மவர் மோடி பைக் ரேலி – திணறியது கேளம்பாக்கம்
பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம்.
பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் காஞ்சிபுர…
Read More
சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார்
சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
“தந்தை பெரியார் தனி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம். தந்தை பெரியார் குறித்து ரஜனிகாந்த் ஊண்மைக்குப் புறம்பாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடப்பதை மக்க்ள் ஆட்சியாகவே நினைக்கவில்லை. தம்ழியகத்தில் எடப்பாடியின் தலைமையில் ‘ஆட்சி’ நடக்கவில்லை – ‘கம்பெனி’தான் நடைபெற்று வருகிறது.
இங்கு பெண்கள் மீதான தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சசிகலா சிறையில்…
Read More
ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் குஷ்பு ஷோபனா ரவி
ரஜினி பேசினாலும் செய்தி, பேசாவிட்டாலும் செய்தி என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது.
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள், வழக்கு தொடரச்சொல்லி கோரிக்கை உள்பட பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், இன்னொரு பக்கம் ஆதரவுக்குரலும்…
Read Moreரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது
துக்ளக் இதழின் பொன் விழாவையொட்டி நடந்த விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஜினிகாந்தை திராவிடர் கழக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் அவரது போயஸ் கார்டன் வீட்டை ஜனவரி 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த தேதியை மாற்றி 21 ஜனவரி (இன்று) காலை 10 மணிக்கு ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் இன்று காலை ரஜினிகாந்த்…
Read More
ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை இடப்படும்
பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.