நாகர்கோயிலைச் சேர்ந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67.
மேடை நாடகக் கலைஞராக இருந்த பாலாசிங், தொடக்கத்தில் ஒருசில மலையாளப் படங்களில் நடித்திருந்தார். பிறகு நடிகர் நாசரின் இயக்கத்தில் உருவான அவதாரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இந்தியன், சிம்மராசி, ராசி, புதுப்பேட்டை விருமாண்டி என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும் அவர் கடந்த ஆண்டில் வெளிவந்த தானாசேர்ந்த கூட்டம், சாமி2, என்ஜிகே, மகாமுனி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தனர்.