April 26, 2024
  • April 26, 2024
Breaking News
January 11, 2019

ஓபிஎஸ் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

By 0 793 Views
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
 
இந்த விசாரணை ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் நடத்தப்பட்டது.
 
அவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130 – க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
 
இதன் தொடர்ச்சியாக ஆறுமுகசாமி ஆணையம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என  இன்று சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும், தம்பிதுரை எம்.பி. ஜனவரி 22ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் எனவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.