May 19, 2024
  • May 19, 2024
Breaking News

Monthly Archives: June 2020

டோனி யாக நடித்த பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை

by on June 14, 2020 0

நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ’எம்.எஸ்.டோனி – தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story). இந்த திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதாகும் இவர் திடீரென்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையே உலுக்கி இருக்கிறது. ’கை பே சே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக […]

Read More

பாரதிராஜாவின் கண்களான ஒளிப்பதிவாளர் பி கண்ணன் மறைவு

by on June 13, 2020 0

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர் பீம் சிங்கின் மகன் கண்ணன். இவரது மற்றொரு சகோதரர் எடிட்டர் பி.லெனின். கண்ணனுக்கு காஞ்சனா என்ற மனைவியும், மதுமதி, ஜனனி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். சுமார் 40 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவு செய்துள்ள இவர், இயக்குநர் பாரதிராஜாவின் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரை தன் கண்கள் என்றே பாரதிராஜா சொல்லி வந்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள மொழிப் படங்களுக்கும் […]

Read More

ரம்யா கிருஷ்ணன் சொகுசு காரில் ஏராள மது புட்டிகள் – டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட ரம்யா

by on June 13, 2020 0

திரையுலகில் எத்தனை சுற்றுகள் வந்தாலும் தாக்கு பிடிப்பவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இதுவரை மூன்று சுற்றுகள் வந்துள்ள அவர் மூன்றிலும் வெற்றிக் கொடி நாட்டி தாக்குப்படித்து வருகிறார். இரண்டாவது சுற்றில் நீலாம்பரி ஆக மூன்றாவது சுற்றில் ராஜ மாதாவாக வந்து ரசிகர்களின் எண்ணங்களில் நீங்கா இடம் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன். இதுவரை எந்த புகாரிலும் சிக்காத அவர் இன்று யாரும் எதிர்பாராத ஒரு புகாரில் சிக்கி விட்டார். பாண்டிச்சேரியில் இருந்து திரும்பி வந்த அவரது சொகுசு காரில் இருந்து […]

Read More

மீண்டும் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா? – முதல்வர் விளக்கம்

by on June 12, 2020 0

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் பேசிய போது வெகுவகமாக நோய்த் தொற்று பரவி வருமவதால் மீண்டும் சென்னையில் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தினார். “சென்னையில்  மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை . கட்டுப்பாடுகளை […]

Read More

கொரோனா நோயாளிகள் மோசமாக கையாளப் படுகின்றனர் – உச்ச நீதி மன்றம்

by on June 12, 2020 0

இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகின்றது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள, டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், உடல்களை அலட்சியமாக தூக்கிப் போடும் மனிதாபிமானமற்ற செயல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக நீதிபதிகள் […]

Read More

வரலாற்றைத் திருத்தி சொல்லக்கூடிய அவசியம் எனக்கு இல்லை – அமீர்

by on June 12, 2020 0

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ. அன்பழகனை நினைவு கூறும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது மேலதிகமாக மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்த தேசியத் தலைவர் […]

Read More

கழற்றி விட நினைத்த நடிகர் கைது செய்ய வைத்த நடிகை – கோலிவுட் பரபரப்பு

by on June 11, 2020 0

சென்னை ஆர் ஏ புரத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இந்த தியாகராஜன் தரிசு நிலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர். இவர் நாடோடிகள் படத்தில் சிறிய ரோலில் நடித்த ஒரு துணை நடிகையை காதலித்து வந்தார். இந்த ஜோடி அடிக்கடி சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தாரகள். ஒன்பது வருடக் காதலை திருமணத்தில் முடிக்க ஆசைப்பட்ட நடிகை தியாகராஜனிடம் அது குறித்து பேசி வந்தார். ஆனால் நடிகையுடன் நெருக்கமாக பழகி அவரது நகை பணத்தை செலவு செய்த […]

Read More

தலைவரை உலுக்கி எடுத்த அன்பு அண்ணனின் மரணம் – உதயநிதி உருக்கம்

by on June 11, 2020 0

 திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நேற்று மரணம் அடைந்த நிலையில் அது தொடர்பான உருக்கமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அதன் விவரம் பின்வருமாறு; ”எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் அந்தவகை. ஏனெனில் அண்ணன் அப்படிப்பட்ட மனிதர். எனக்கே இப்படியென்றால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இணைந்து பயணித்த தலைவர் அவர்கள் எப்படித் […]

Read More