April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா?
September 23, 2020

மகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா?

By 0 414 Views

நடிகர் சுஷாந்தின் மேனேஜர்களில் ஒருவரான ஜெய சஹா அளித்த தகவல் தான் இப்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

போதை பொருள் வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவியும், நடிகை யுமான நம்ரதா ஷிரோத்கருக்கு தொடர்பு இருப்பதாக ஜெய சஹா கூறியிருக்கிறார்.

மேலும் அவர் போதைப் பொருள் கேட்டதற்கான உரையாடல் களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்தடுத்த திரை உலகங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கும் நிலையில் கோலிவுட்டுக்கும் விசாரணை நீளலாம் என்பதால் இங்குள்ள பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதற்கிடையே…

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு

தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கும் சம்மன் போயிருக்கிறது.