இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல் விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம். பாட்னாவில் அவர் சிறுவயதில் வசித்த […]
Read Moreசில நாள்களுக்கு முன்புதான் பீகார் முதல்வர் ott திரையிடல்களுக்கு சென்சார் வேண்டும் என்று கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதை துரிதப்படுத்தும் போலிருக்கிறது பாலியலை மட்டுமே நம்பி படமெடுக்க தொடங்கிவிட்ட ராம்கோபால் வர்மாவின் அடுத்த பிரைவேட் சேனல் படம். இதில் முன்பு கிளைமாக்ஸ் என்ற படத்தை வெளியிட்டு கல்லா கட்டியவர் அந்த ருசியில் அடுத்து நேக்கட் என்ற படத்தை வெளியிடுகிறார். இது தொடர்பாக அவர், “ஒரு படம் முதல் வார இறுதியில் வசூல் செய்ய வேண்டும் […]
Read More‘ நீதானே என் பொன்வசந்தம் ‘ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் வித்யு லேகா. பிரபல நடிகர் மோகன் ராமின் மகளான இவர் தன்னுடைய உடல் எடை காரணமாக நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன் உடல் எடையை இருபதிலிருந்து முப்பது கிலோ குறைத்து ஸ்லிம் ஆகிவிட்டார். எப்படி இது சாத்தியம் அவரே சொல்கிறார் கீழே உள்ள வீடியோவில் […]
Read Moreஅத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு பால் முகவர்களை பால் […]
Read Moreபெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை அடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர். ரெஹானா பாத்திமா என்ற பெண்ணும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார். இப்போது, அதே பாத்திமா புதியதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரெஹானா பாத்திமா, ஜூன் 19 அன்று, தனது […]
Read Moreபாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் கும்கி அஸ்வின், விக்ரம் பிரபுவின் கும்கி படத்தில் நடித்து பிரபலமானார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் சுவாமிநாதன் மகன் ஆவார். கும்கி அஸ்வினுக்கும் சென்னை கே. கே.நகரை சேர்ந்த ராஜசேகர் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் பணி புரிகிறார். இவர்கள் இருவருக்கும் இந்த மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. […]
Read Moreநெல்லையில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங். வயது 76. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்டார். தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்ததும், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. […]
Read Moreசென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை. […]
Read Moreவிஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது. தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை தென்னகத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பிரபல நடிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.தமிழில் கார்த்தி, ஆர்யா, தெலுங்கில் ராணா, மலையாளத்தில் மோகன்லால்,கன்னடத்தில் யஷ் ஆகியோர் வெளியிடுகிறார்கள். படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாக இருக்கிறது.இதற்கு முன் வெளியான ‘சக்ரா’வின் க்ளிம்ப்ஸ் என்கிற குறு முன்னோட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த குறு முன்னோட்டத்தை பார்த்தவர்கள் […]
Read More