April 25, 2024
  • April 25, 2024
Breaking News
October 21, 2018

தேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..!

By 0 1218 Views

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்…’ என்ற பாடலைப் பாடி செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர் முதல் பரிசு வென்றது அநேகமாக அனைவரும் அறிந்த செய்திதான். அந்தப் பாடலை எழுதியவர் ‘செல்ல தங்கையா’.

சின்னத்திரையில் புகழ்பெற்ற இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. யூடியூப்பில் மட்டும் இந்தப்பாடலை இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.

போதாதா..? உலகம் முழுதும் பிரபலமான இந்தக் குழு அப்படியே ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறது. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்க, காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் ‘செல்ல தங்கையா’வும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

எழில் பூஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் ‘செல்ல தங்கையா’. ‘ஏ விமல் புரொடக்சன்ஸ்’ சார்பாக டி..சித்திரைச்செல்வி , எம்.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

‘கரிமுகன்’ படத்துக்காக திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள மலையில் ஒரு காதல் காட்சிக்காண படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருத்போது அமைதியான அந்த காட்டுப்பகுதியில் திடீரென்று நாங்கள் மைக்கில் பேசிய சத்தம் கேட்டு தேனீக்கள் படக்குழுவினரை துரத்தித் துரத்தி கொட்ட ஆரம்பித்து விட்டது.

தேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்கு சென்று விட்டோம். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்று படிப்பிடிப்பை முடித்தோம்..!” என்றார்.

மறுநாள் தேனீக்கள் ஒன்றும் செய்யவில்லையா..?” என்றால், “மீண்டும் அதே மலைக்குப் போவோமா..? வேறு மலையில் மைக், ஸ்பீக்கரை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு படம் பிடித்தோம்..!” என்றார்.

படம் இம்மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளதாம்.