April 25, 2024
  • April 25, 2024
Breaking News
June 8, 2018

3-வது முனையமானது தாம்பரம் ரயில் நிலையம் – நெல்லைக்கு புதிய ரயில்

By 0 1023 Views
சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் சென்னையில் இருக்க, மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் மாற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 49 கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் இன்று தாம்பரத்தில் மூன்றாவது முனையம் தொடங்கப்பட்டது.
 
இந்த முனையத்தை மத்திய ரயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு செல்லும் ‘அந்த்யோதயா’  ரயிலையும் அவரே கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்டதாகும்,. 
 
16 முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் எல்.இ.டி விளக்கு, செல்போன்கள் சார்ஜ் செய்யும் வசதிகள் ஆகியவை உள்ளன. தொடங்கப்பட்ட இன்று மட்டும் தாம்பரத்திலிருந்து 5.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், நாளை முதல் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மாலை 3.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
 
வாரத்தில் திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ‘அந்த்யோதயா’ ரயிலில் ரூ.240 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.