March 28, 2024
  • March 28, 2024
Breaking News
May 26, 2018

மே 28-ல் 50 சதவிகித கட்டண சலுகை தரும் நியூ ஹோப்

By 0 1104 Views

மே மாதம் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் நல தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி அன்றைய தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு வரும் அனைத்துப் பெண்களுக்கும் 50 சதவீதம் அளவிற்கான கட்டண சலுகையை அறிவித்திருக்கிறது சென்னையில் இயங்கி வரும் ‘நியூஹோப் மருத்துவமனை.’

இது தொடர்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன் ஹெர்குலீஸிடம் கேட்டபோது, “1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் தேதியன்று அனைத்து வயதிலும் உள்ள மகளிருக்கான ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக ‘சர்வதேச மகளிர் நல தினம்’ அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு எங்களுடைய மருத்துவமனையில் அன்று அனைத்து வகையான பரிசோதனை, சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக வரும் பெண் நோயாளிகளுக்கு 50 சதவீத அளவிற்கு கட்டண சலுகையை அறிவித்திருக்கிறோம். இதனைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இன்றைய சூழலில் பெண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு குறைந்து வருகிறது. அது அதிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த கட்டண சலுகையை அறிவித்திருக்கிறோம். ’ என்றார்.

பேசுகையில், “இன்றுள்ள பெண்கள் பூப்பெய்தும் காலம் முதல் மாதவிடாய் சுழற்சி நிற்கும் காலம் வரை பல்வேறு வகையிலான கோளாறுகளையும், சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள்.

இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஆனால் இதில் பெரும்பாலும் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளால் ஏற்படும் தடை என்று தெரிந்துகொள்வதில்லை. இத்தகைய பாதிப்பு ஏற்படும் போது அவர்கள் சாதாரணமாக ஒரு எளிய பரிசோதனையை செய்து கொண்டால் போதுமானது. எந்த பிரச்சினையையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று குணமடையலாம்.

New Hope Medical Centre

New Hope

அதே போல் இருபது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தற்போதைய காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆளாவது அதிகரித்திருக்கிறது. மூன்று பெண்களில் ஒருவர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கர்ப்பப்பை வாய் கோளாறுகள், கருக்குழாய் அடைப்பு, சினைமுட்டை உற்பத்தி மற்றும் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை எளிய பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அறிந்துகொண்டு அதற்கு இங்கு நிவாரணமும், சிகிச்சையையும் பெற்று குணமடையலாம்..!” என்கிறார் ‘நியூ ஹோப் மருத்துவமனை’யின் மகப்பேறுவியல் மற்றும் புற்றுநோய் மருத்துவ நிபுணரான டாக்டர் நஸரீன்.

“இன்றைய தேதியில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண்கள் தங்களது மார்பகங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் போது, சந்தேகப்படும்படியாக ஏதேனும் அசௌகரியங்கள் தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று இதற்கான பாப்ஸ்மியர் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

அதே போல் பாப்பிலோமா என்ற வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளையும் தெரிந்துகொண்டு அதற்குறிய தடுப்பூசிகளையும் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளவேண்டும்..!”என்கிறார் டாக்டர் அபிதா.

இதே மருத்துவமனையில் தொற்று தடுப்பு பிரிவு மருத்துவராக பணியாற்றும் டாக்டர் பாக்யராஜ் பேசுகையில்,”நியூ ஹோப் மருத்துவமனயில் தொற்று தடுப்பு பிரிவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் என அனைவரும் நூறு சதம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதால் இந்த மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை நூறு சதம் வெற்றியளிக்கிறது.

இதனால் இந்த மருத்துவமனைக்கு இந்தியாவைத் தவிர இலங்கை, பங்களாதேஷ், துபாய், இங்கிலாந்து, ஆப்பிரிக்கா என பத்திற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நோயாளிகள் வருகை தந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்து செல்கிறார்கள்..!” என்றார்.

‘நியூ ஹோப்’ என்றால் ‘புதிய நம்பிக்கை…’ இவர்களின் கூற்றிலிருந்து அதை இவர்கள் விதைக்கவே செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.